விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அண்மையில் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த உலக வங்கியின் பிரதிநிதிகள், அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்தபோது, இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதல், 18 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக, 30 மில்லியன் டொலர் நிதியை வழங்க உலக வங்கியின் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts:


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை - அமைச்சர்...
ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் - அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு ப...
வடக்கு நோக்கி நகரும் சூரியன் - இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்ம...