விலை அதிகரிப்பின் எதிரொலி: அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியில்!
Sunday, January 15th, 2017
அதிஷ்ட இலாபச் சீட்டின் விலையை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை 40 வீத வீழ்ச்சியடைந்துள்ளதாக அனைத்து இலங்கை அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிஷ்ட லாபச் சீட்டை 30 ரூபா கொடுத்து கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்கள் பின்னிப்பதாக, அந்த சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாந்து மேலும் தெரிவித்தார். இந்த விலை அதிகரிப்பு காரணமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரம் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அனைத்து இலங்கை அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் அலக்ஸ் பர்ணாண்டோ குறிப்பிட்டார்
Related posts:
பாடசாலைகளில் பணம் அறவிடப்படுமாயின் அது குறித்து அறிவிக்க அழைப்பு இலக்கம் அறிமுகம்!
உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபத...
வடக்கு கிழக்கை புரட்டி எடுத்த புரவி சூறாவளி – திருகோணமலையில் பல பகுதிகளிலும் மக்கள் பாதிப்பு
|
|