விரைவில் தமிழ் சிறைக்கைதிகள் விடுதலை – ஜனாதிபதி நடவடிக்கை!
Thursday, November 22nd, 2018வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து தமிழ்க்கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இவர்களது விடுதலை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் றோகண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சனைக்கு தீர்வுகாண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தில் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதத்திற்கு முன்னதாகவே கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டர்.
Related posts:
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் இணையத்தளம் பிரதமரின் தலைமையில் வெளியீடு!
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இது உரிய நேரிமில்லை - உற்பத்தி செலவுகளை குறைப்பதே சிறந்தது என அமைச்சர...
பாடசாலை சேவை சிற்றூர்தி - அலுவலக சேவை வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!
|
|