பழைய முறிகண்டி கிராமத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படுகள் வேண்டும் – பிரதேச மக்கள்!

Thursday, August 2nd, 2018

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள பழையமுறிகண்டி கிராமத்தில் பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுவதாகவும் இவற்றை சீர் செய்து தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பழைய  முறிகண்டிக்கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் இவற்றைத் தீர்த்து வைக்குமாறும் தாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக கோரிவருவதாகவும் இதுவரை தமக்கான அடிப்படை வசதிகள் எவையும் சீர் செய்யப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் அன்றாடம் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது பழைய முறிகண்டி கிராமத்திற்கான பிரதான வீதி இன்றுவரை புனரமைக்கப்படாது காணப்படுவதால் தமது போக்குவரத்துகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள் இரண்டு கிலோ மீற்றர் வரையான உள்ளக வீதியினை புனரமைத்துத் தருமாறும் நெல் உலர்த்தும் மேடை மற்றும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை என்பவற்றை அமைத்து தருமாறும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் இவ்வாண்டிலும் பிரதேச செயலரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கிராம மட்ட அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: