விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டின் சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Tuesday, April 9th, 2024

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்

சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான உடனடித் தீர்வு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே எனத் தெரிவித்த ஜனாதிபதி,

அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டமாக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து துறைகளும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்ட முறைமையொன்று கொண்டுவரப்படும்.

அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: