விமான நிலைய நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!

Wednesday, November 16th, 2016

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிலைய விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சமன் எதிரிவீர தெரிவித்துள்ளார்.

விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரவு நேர விமான சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளதாக விமான கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையம் தற்போது 60 லட்சம் பயணிகளுக்கான வசதிகளை கொண்டிருப்பதுடன், அதனை சுமார் 80 லட்சம் பேர் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

பயணிகள் நெரிசலை தவிர்க்குமுகமாக நவீனமயமாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட  இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

aireport-415x260

Related posts: