விமான நிலையத்தின் பாதுகாப்பிற்கு விரைவில் புதிய நடைமுறை!

Thursday, February 16th, 2017

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிவில் விமான சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 20 நாய் குட்டிகளை கொள்வனவு செய்து, பயிற்சியளித்து விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அனைத்து அரசுகளினதும் பொறுப்பு என்பதுடன், வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள், பணம் மற்றும் சட்டவிரோதப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Katunayake-image-1

Related posts: