வித்தியா படுகொலை வழக்கு:  12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு !

Thursday, April 6th, 2017
 
 
யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் எதிர்வரும்-19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 12 சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை(04) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை எதிர்வரும்-19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்தார்.

Related posts: