வித்தியாவின் தாயை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை மறுப்பு!
 Wednesday, June 22nd, 2016
        
                    Wednesday, June 22nd, 2016
            மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்கள் இருவருக்கும் பிணை வழங்கமுடியாது என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை. எம். எம். றியால் தெரிவித்தார்.
மாணவி வித்தியா வண்புனர்வு செய்யபட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன நிலையில் வித்தியாவின் தாயார் சந்தேகநபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தபட்ட வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது
இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் சட்டதரணி ஊடாக பிணை மனு கோரினர். இதன் போது சாட்சியினை அச்சுறுத்திய வழக்கில் நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கமுடியாது எனவும் இது தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை கோரமுடியும். எனவும் நீதவான் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!
இந்தமுறையும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டம் கிடையாது!
யாழ் மாநகரப் பகுதியில் டெங்குத் தொற்று அதிகரிப்பு !
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        