விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு!

Monday, January 16th, 2023

2021 (2022) ஆம் ஆண்டுக்கான ஆரம்ப பிரிவெனாக்களின் இறுதிப் பரீட்சையின் விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று (16) முதல் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரம் கோரப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களை பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: