விடுதி வசதி அமையுமாகில் அதிகமான மாணவர்கள் கற்கும் வசதி ஏற்படும் – வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் தெரிவிப்பு!

Friday, November 11th, 2016

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரிக்கு விடுதி வசதி அமையுமாகயிருந்தால் அதிகளவான மாணவர்களும் கற்கும் வசதி ஏற்படும் என வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக மேலும் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

கடந்த வருடம் 645 மாணவர்கள் எமது தொழில்நுட்பக் கல்லூரியில் பதிவை மேற்கொண்டிருந்தனர். இவர்களில் 500 மாணவர்களே பரீட்சையில் தோற்றவுள்ளனர். 145 மாணவர்கள் இடை விலகிவிட்டனர். இடை விலகியவர்கள் தூர இடங்களில் இருந்து வருவதனால் போக்குவரத்து பிரச்சிரனைகளை எதிர்கொள்வதுடன் தங்குமிடங்களுக்கும் அதிகளவான நிதியை செலவிட வேண்டியேற்படுகின்றது. எனவே தொழில்நுட்பக் கல்லூரியில் விடுதி வசதி இருக்குமாயின் அதிகளவான மாணவர்கள் தங்கி நின்று கற்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன் இடைவிலகலும் குறைவாகும்.

இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவுத்திகதியிடப்பட்டு 24 பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அவற்றில் முழுநேர பயிற்சி நெறிகள் இலவசமாக கற்பிக்கப்படும் என்பதுடன் அவர்களுக்கான பயண பருவச்சீட்டுகளும் ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு பணமும் வழங்கப்படவுள்ளது. எனவே பாடசாலை கல்வியை நிறைவு செய்த 17 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விண்ணப்பித்து சிறந்த கற்றல் செயற்பாடுகளில் இணைந்துகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

phoca_thumb_l_dambulla

Related posts: