யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் விபத்து : ஒருவர் பாடுகாயம்!
Friday, September 30th, 2016யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து ஸ்ரான்லி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோதியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாகன விபத்தில் படுகாயமடைந்தவர் அரியாலையைச் சேர்ந்த கார்த்திகன் வயது 22 எனவும் இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
வடமராட்சி வலய பாடசாலை ஒன்றின் புதிய மாடிக் கட்டடத் திறப்பு விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்து ...
பழிவாங்கல் தொடர்ந்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை : மின்சார சபை !
அபுதாபி-இலங்கை நல்லுறவைக் கட்டியெழுப்ப முயற்சி!
|
|