நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Tuesday, April 6th, 2021

யுத்தத்தின் பின் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எங்கள் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் எம் சமூகத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையின் கீழ் போரின் போது கால்களை இழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தை இலங்கை இராணுவம் நேற்றையதினம்’ அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

போர்க்களத்தில் அவர்கள் எங்களுக்கு எதிராகப் போராடிய போதிலும் ௲ அவர்கள் இனி எங்கள் எதிரிகள் அல்ல.அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால் அனைவருக்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது.

மேலும் இலங்கையில் நல்லிணக்கம் குறித்து கேள்விகளை எழுப்புவோர் நாட்டில் நல்லிணக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை தங்கள் கண்களால் பார்க்க முடியும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்த பின்னர் புனர்வாழ்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளதென்றும் இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

குறித்த நிகழ்வில் முன்னாள் போராளிகள் 64  பேருக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: