வாழ்வாதார அபிவிருத்திக்கு செயல்திறன் குழு உருவாக்கம் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

Saturday, January 25th, 2020

ஓய்வுபெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தலைமையில் வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்காக செயல்திறன் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் பல்வேறு துறைகளை பிரதநிதித்துவபடுத்தி 12 உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி வி.சிவஞானசோதி, எச்.எம்.டபிள்யூ.ஆரியரத்ன, பேராசிரியர் சிராந்த ஹென்கெந்த, கலாநிதி எஸ்.எஸ.சிவகுமார், நிமல் அபேசிரி, டொக்டர்; அநுருத்தா பாதேனியா, டொக்டர்; சஞ்சிவனி ஹபுகோட, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேதா பெரேரா, காயத்ரி குணருவன், சஞ்சீவ குணவர்தன, மற்றும் சமந்தா குமாரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட மற்றும் நகரில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் திறமைகள், விசேடத்துவம் மற்றும் அவர்களின் பலவீனங்கள், அவர்களுக்குள்ள சவால்கள் ஆகியன தொடர்பில் சரியான முறையில் மதிப்பீடு செய்யாமை வறுமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் சுபீட்சத்தின் நோக்குடு அரசாங்கத்தின் கொள்கைக்கமைய பாதுகாப்பான நாடுடு செழிப்பான தேசம்டு பயனுள்ள குடிகள்டு மகிழ்ச்சியான குடும்பம் ஆகிய தொனி பொருட்களின் கீழ் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த செயலணியின் விவேகம் மற்றும் நம்பக தன்மையின் அடிப்படையிலான செயற்றிட்டத்திற்கு உரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Related posts: