வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது!
Tuesday, April 16th, 2019
மானிப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 உந்துருளிகள் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேகத்துக்குரியவர்கள் வாள் வெட்டு சம்பவங்களுக்கு செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களது கைபேசியில் மீட்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Related posts:
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே...
இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் - இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் ...
பொருளாதார நெருக்கடிகளுடன் வாழ்ந்துவரும் மாணவர்களுக்கு அமைச்சரால் வழங்கப்பட்ட உதவியானது காலமறிந்து செ...
|
|
|


