வாக்குகளை எண்ணுவதில் புதிய முறை!

Sunday, September 3rd, 2017

புதிய முறையின் கீழ் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் வாக்குகள், வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படும் என கூறப்பட்டுள்ளது.

குறைந்த வாக்கு எண்ணிக்கையை கொண்ட வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் தூர இடங்களில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் அளிக்கப்படும் வாக்குகளின் பெட்டிகள் ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குகளை எண்ணும் வாக்களிப்பு நிலையங்களில் பிரதான அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன் தேர்தல் முடிவுகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தொகுதி மட்டத்திலான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணைக்குழு மூலம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே தபால் மூல வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது. அவை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு பெட்டிகளில் போடப்பட்டு ஒன்றாக எண்ண தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Related posts:

பலாலிவிமான நிலையம் மயிலிட்டித் துறைமுகத்தின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப் பொதுமக்களின் நிலங்களைச் சு...
துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்க...
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனம் இலங்கையில் - கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெர...

மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கஞ்சன விஜசேகர தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கவில்லை - தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைச...
சீரற்ற காலநிலை - நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் - சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர...