வாக்காளர் பதிவு கால நீடிப்பு!

Wednesday, May 31st, 2017

நடைபெற்றுவரும் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள், அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் மேலும் பத்து நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்குள் வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஏனைய பகுதி மக்களுக்கு இந்த கால நீடிப்பை வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக மாத்தறை, காலி, கொழும்பு போன்ற மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் இந்த 10 நாட்கள் நீடிப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


மின்சார தேவை அதிகரிப்பு - நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டுத் திணைக...
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி - பட...
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ...