வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
Tuesday, July 28th, 2020நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாளைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை எனின் தபால் காரியாலயத்தில் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தாபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது எதிர்கால சந்ததியினர் சமூகத்தை தன்னம்பிக்கையுடன் அணுகவேண்டும் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜே...
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 3711 பேர் கைது!
மின்சார கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி - அங்கீகாரம் வ...
|
|