வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022

நாடளாவிய ரீதியாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக ஆயிரத்து 971 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தின் கல்வி மற்றும் பொது பாதுகாப்பு நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சேனக கமகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் வாகன விபத்துக்கள் காரணமாக குறைந்தது 8 பேர் உயிரிழப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: