உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் 13 தகவல் எனக்கு வழங்கப்பட்டுள்ளது!

Wednesday, August 7th, 2019


தான் பதவியில் இருந்த காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் 13 புலனாய்வு தகவல்கனை அரசாங்க புலனாய்வு பிரிவினர் தனக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவற்றில் பல எமது நாட்டுடன் தொடர்பு அற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தனது வேண்டுகோளிற்கு இணங்க பாதுகாப்பு செயலாளரும் அறிக்கை ஒன்றை தன்னிடம் சமர்பித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புலனாய்வு தகவல்களை தன்னால் தற்போது வழங்க முடியாது எனவும் ஏனெனில் அது அவர்களின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்த அவர் அதன் உள்ளடக்கத்திலிருந்து சில பகுதிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி தேசிய தவ்ஹீத் அமைப்பு ஐஎஸ் அமைப்பின் கொள்கையை பரப்புவதாக தகவல் கிடைத்ததாகவும் இதுவே சஹ்ரான் தொடர்பில் தனக்கு முதலில் கிடைத்த தகவல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: