வாகனச் சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய விவகாரம் – ஏற்கமுடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, April 1st, 2021

பொலிஸாரின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாகனச் சாரதியொருவரை மோசமாக தாக்கிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரிய விவகாரங்களுக்கான அமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிற்கு உத்தரவிட்டார் என தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இவ்வாறான சம்பவங்களுக்கு அரசாங்கத்தை குற்றம் சாட்ட முடியாது. இவ்வாறான சம்பவங்கள் உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்டவேளை எவரும் அரசாங்கத்தை குற்றம் சாட்டவில்லை எனவும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: