வழமைக்குத் திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் – ஒருநாள் சேவை இடம்பெறாது எனவும் அறிவிப்பு!

Monday, May 9th, 2022

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்றுமுதல் மீண்டும் வழமைப்போல் சேவையை முன்னெடுத்துள்ளது..

எனினும், ஒருநாள் சேவை இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம், 6 ஆம் மற்றும் இன்றைய தினங்களில் சாதாரண சேவையின் கீழ் நேரத்தை ஒதுக்கி கொண்டவர்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்கப்படவுள்ளன

அத்துடன், கடந்த 5 ஆம் திகதி சாதாரண சேவையின் கீழ் விண்ணப்பங்களை கையளிப்பதற்காக திணைக்களத்திற்கு சென்று, இலக்கம் அல்லது திகதி முத்திரையை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளைமுதல் விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முற்கூட்டிய நேரத்தை ஒதுக்கி கொள்வது அவசியமாகும்.

இதற்கமைய, www.immigration.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசித்து அல்லது 070 71 01 060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அதற்கான காலம் மற்றும் நேரத்தினை ஒதுக்கி கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் ஒரு லட்சம் ரூபா ரூபாய் அபராதம் - வர்த்தக அமைச்சர் பந்துல க...
நிதிக் கடன் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் வலுவாக உதவும் - சீனாவின் வெளிவி...
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் சுசி...