இலங்கையில் அதிகரிக்கும் வெப்பம் – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வரவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023

நாட்டில் தற்போது வறட்சி காலநிலை அதிகரித்துள்ளமையினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலைக்குள் 8 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் 97 ஆயிரத்து 490 பேர் பாதிக்கபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 128 என்றும் தெரிவித்தள்ளது.

இதேவேளை வறட்சியான காலநிலையினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் பதிவாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் 69 ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், வறட்சியான காலநிலைக்கு ஏற்ற வகையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவி - சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!
சதொச விற்பனை நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கை - வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வ...
சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டதற்கிணங்கவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர் - வைத்தியசாலைகளின் தேவைகள...