மேதின பேரணிக்கு நல்லூரில் அணிதிரளுங்கள் -வடக்கு மாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் அழைப்பு!………

Sunday, April 26th, 2026


தொழிற்சங்கங்களூடான தொழிலாளர்களின் பலத்துடன் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசு கடந்த கால அரசுகள் போன்றே தொழிலாளர்களை நசுக்க முயல்கின்றது என குற்றம்சாட்டும் வடக்கு மாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளனம் வரவுள்ள உழைப்பாளர் தினத்தில் அதன் வெளிப்படுத்துகையை காண்பிக்க ஓரணியில் அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (26) நடைற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் கூறுகையில் –

ஒவ்வொரு வருடமும் உரிமைகளை வலியுறுத்தி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆனாலும் அந்த உழைப்பாளர்களுக்கு எந்த  உரிமைகளும் கிடைக்கப்பெற்றதாக இல்லை.

அதனடிப்படையில் வடக்கு மாகாண தொழிற் சங்கங்களின் சம்மேளம் முன்னெடுக்கும் மே தின எழுச்சி பேரணி, மே 1 அன்று
நல்லூர் முன்றலில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நல்லூரில் ஆரம்பமாகும் குறித்த பேரணி பருத்தித்துறை வீதியூடாக ஆரியகுளம் சந்தி –   ஸ்ரான்லி வீதுயூடாக முட்டாசுகடை சந்தி –  கே.கே.எஸ் வீதியூடாக சத்திரத்து சந்தி –   ஆஸ்பத்திரி வீதியூடாக வேம்படிச் சந்தி –  யாழ் மாவட்ட செயலகம் அருகே உள்ள YMCA மண்டபத்தில் நிகழ்வுக நடைறவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

Related posts: