வல்லுனர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்: கொரோனா தொடர்பில் ஜனாதிபதி!

Sunday, April 5th, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை நிலைமை சீர் அடையும் வரையில் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் முன்னெடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோர் அதேபோல் அவர்கள் நெருங்கி பழகியவர்கள் ஆகியோரை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Related posts: