அரச அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவிப்பு!

Monday, September 11th, 2023

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் வரும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுமக்கள் 1905 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புகார்களுக்கு தீர்வு காண கூடுதல் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களால் முன்வைக்கப்படும் விடயங்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

மேலும் தனித்தனியாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் நேர்காணலின் போது தகுதியான நபரைத் தேர்ந்தெடுத்து வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: