வறட்சி காரணமாக பத்து இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிப்பு
Tuesday, July 25th, 2017நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் , மன்னார் , இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு , வடமத்திய , வடமேற்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.குருநாகல் , திருகோணமலை, புத்தளம், முல்லைத்தீவு , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் வறட்சியினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|