வறட்சியால் வடக்கு, கிழக்கில் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, June 3rd, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியின் காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 ஆயிரத்து 670 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மணலாறு, ஒட்டுச்சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு போன்ற ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், யாழ்ப்பாணத்திலும் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையின் காரணமாக, 1 இலட்சத்த 30 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதியில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு நீர்தாங்கிகளின் ஊடாக நீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

விரைவில் தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவை - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா துரித நடவடிக்கை!
அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு – அதிகளவு மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகல் - இலங்கை ஆசிரியர...
அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது - அணுசக்தி ஒழு...