வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, March 14th, 2021

சுகாதார சேவைக்கான யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள குறித்த சங்கம், “சுகாதார சேவை யாப்பானது, வைத்தியத்துறைசார் முக்கியஸ்தர்களின் இணக்கப்பாடின்றியே திருத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன் குறித்த திருத்தங்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: