பேருந்துகளில் பயணிக்கவும் வருகின்றது அடையாள அட்டை இலக்க நடைமுறை – போக்குவரத்து அமைச்சு!

Sunday, April 26th, 2020

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் பிரகாரமே பேருந்துகளில் பயணிக்கவும் அனுமதியளிக்கப்படும் என போக்குவரத்துஅமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவது தொடர்பில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்துவோர் சமூக இடைவெளி பேணுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கவனம் செலுத்தியே இவ்வாறு அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த நடைமுறையை பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் போக்குவரத்து சேவையை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 1, 2 உள்ளவர்களும்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 3, 4 உள்ளவர்களும்

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 5, 6 உள்ளவர்களும்

ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில்  7, 8 உள்ளவர்களும்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களின் அடிப்படையில் 9, 0 உள்ளவர்களும் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: