வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நாளைவரை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!

Tuesday, May 19th, 2020

நாடாளுமன்ற தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்றையதினம் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

முன்பதாக இந்த மனுக்கள் நேற்றையதினம் 18 ஆம் திகதி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரு, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தினால் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது குறித்த மனுக்களை இன்று முற்பகல் 10 மணிக்கு தொடர்ந்து விசாரிக்க நீதியரசர்கள் ஆயம் நேற்று தீர்மானித்திருந்தது.

சட்டத்தரணி சரித குணரத்ன ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியஇ அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகர பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்இ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மனுக்களை நாளை முற்பகல் 10 மணிக்கு தொடர்ந்து விசாரிக்க நீதியரசர்கள் ஆயம் இன்று தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: