குறைந்த வருமானமுடைய மக்களுக்கு முன்னுரிமை!
Sunday, December 24th, 2017குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில்முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பொலன்னறுவை மாவட்டசெயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தி அவர்களது வசதி வாய்ப்புகளைமுன்னேற்றுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் வறுமையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதை முக்கியபணியாக மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
SMS தொடர்பில் எச்சரிக்கை - இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்!
நாடளுமன்றம்கலைக்கப்பட்டது!
ஜனாதிபதி - அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே இடையே நாளை சந்திப்ப...
|
|