வரும் இரு வருடங்களில் 2 அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் – கல்வி அமைச்சர்!
Thursday, February 9th, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 2 அரச வைத்திய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மற்றும் குளியாப்பிடியவில் இந்த இரண்டு வைத்திய கல்லூரிகளும் அமைக்கப்படவுள்ளன. குளியாப்பிடியவில் நிறுவப்படவுள்ள கல்லூரிக்கு முதற்கட்டமாக 200 மாணவர்களை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக வேண்டி அரசாங்கம் 3 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாகவும் இன்று அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts:
நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 35 ஆயிரத்து 413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!
புதிதாகத் திருமணமாகி குறைந்த வருமானம் பெறும் தம்பதியருக்குக் காணிகள் - காணி மற்றும் காணி அபிவிருத்தி...
வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பம்!
|
|
|


