வருமானம் அற்றுப்போனதால் நிர்க்கதியாகியுள்ளோம் – பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!
Saturday, July 3rd, 2021
பல மாதங்களாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்களது வருமானம் முற்றாக அற்றுப் போய் இருப்பதாக, பாடசாலை சேவையை முன்னெடுத்த வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடரும் நிலைமைகளால் தங்களது கடன்களையும் வாகனங்களுக்கான குத்தகை தவணைக் கொடுப்பனவுகளையும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல் மாகாணத்தில் நடுத்தர நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் நிறுவனங்களின் அமைப்பும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது வருவாய் இழக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விஜயகலா மகேஸ்வரன் கைது!
விஜேதாஸ ராஜபக்ஷ - ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பு - நாட்டின் தற்போதைய பொருளதார மற்றும் அரசியல் நி...
வடக்கிலுள்ள அனைத்து தனியார் சுகாதார சேவைகள் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடு!
|
|
|


