வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!
Thursday, January 25th, 2024இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
தேர்தல் தொடர்பான நகர்வுகள் இரண்டாம் பட்சமானவைதான். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்;
000
Related posts:
ஜனாதிபதி - கடற்படைத் தளபதி சந்திப்பு!
இயந்திரம் செயலிழப்பு - நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை!
யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!
|
|