வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, May 29th, 2023வரி நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வரி விதிப்பு முறையை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் வகையில் இலத்திரனியல் முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் வரி விவகாரங்களுக்கு தனி நீதிமன்றம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இலங்கைக்கு எதிராக சதி செய்வோருக்கு பாரிய தோல்வி - ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிப்பு!
அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் - வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி இலங்கை வருகை - நிதி அமைச்சு தகவல்!
|
|