யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்த கொரோனாத் தொற்று – சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தகவல்!

Wednesday, March 31st, 2021

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பணிப்பாளர் கேதீஸ்வரன்  இதன் மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து 117 பேர் இன்று முற்பகல் வரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும் –

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முல்லேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்டன. அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 1440 பேரிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் இதுவரை 35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு பகுதியினரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன. அதன் பெறுபேறுகள் இன்றிரவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ள பணிப்பாளர் கேதீஸ்வரன் 1440 பேரின் பரிசோதனை முடிவுகளும் முழுமைப்படுத்தப்படும் என்றும் தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: