வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்துக்கு எம்.பி.களுக்கு மேலதிக நேரத்தை வழங்கத் தீர்மானம்!
Tuesday, November 9th, 20212022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக நேரத்தை வழங்க பாராளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் போது நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு அனுமதிக் கப்பட்ட நேரத்தை அதிகபட்சமாக 10 நிமிடங்களாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்நிலையில் வரவு -செலவு திட்டம் மீதான விவாதம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்!
துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்!
தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
|
|