வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மனின் தேர்!

Monday, July 15th, 2019

வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அன்னை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்தார்.

யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரிழுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர். தொடர்ந்து நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று உள்வீதி உலா இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா சத்தத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.

Related posts: