வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் கைது!

Monday, October 3rd, 2016

21 வயதுக்குக் குறைந்த சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களை நேற்று முன்தினம் சனிக்கிழமை(02) யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.நகரப் பகுதியிலுள்ள தேநீர்ச் சாலையில் 21 வயதிற்குக் குறைந்த சிறுவர்களுக்குச் சிகரெட் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. இதனையடுத்து நேற்று முன்தினம் குறித்த இரு விற்பனை நிலையங்களையும் முற்றுகையிட்ட பொலிஸார் சிறுவர்களுக்குச் சிகரெட் விற்பனை செய்யும் போது கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர். கைதான சிறுவர்கள் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.

சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

courthammer5501

Related posts:


கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
நாடுமுழுதும் 20 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி - எரிசக்தி அமைச்சர் கஞ்ச...
பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!