வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபராக கே.கனகசுந்தரம் நியமனம் !

Wednesday, March 15th, 2017

வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபராக கே.கனகசுந்தரம் பதவியேற்றுள்ளார். இதுவரை காலமும் வடக்கு மாகாணப் பிரதித் தபாலதிபராகக் கடமையாற்றி வந்த இரத்தினசிங்கம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கே கனகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தபால் திணைக்களத்தில் முன்னர் கடமையாற்றி வந்த இவர் அண்மையில் வடமாகாணப் பிரதித் தபாலதிபராக நியமனம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts: