வடமாகாணத்தின் புதிய சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!
Thursday, September 15th, 2016
புதிதாக வடமாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் எவ்.ஏ.ஏ.சரத்குமார இன்று தனது கடமைப் பெறுப்பினை உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பகுதியில் அமைந்துள்ள சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் வைத்தே அவர் தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதன் போது பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார், இதன் பின்னர் வடமாகாணத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் தங்களை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுள் வரவேற்றியிருந்தனர்.
இதன் பின்னர் சுப முகூர்த்த வேளையில் அவர் தனது பதவியினை பெறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.
Related posts:
சீரற்ற காலநிலை - அவசர உதவிக்கு உடன் அழையுங்கள்!
நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்- ஜனாதிபதி!
இலங்கையில் நேற்று மட்டும் 368 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு - இராணுவத் தளபதி!
|
|