வடக்கு நோக்கி வருபவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவர் –சுகாதார அதிகாரிகள் அறிவிப்பு!
Sunday, October 25th, 2020தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டின் கொரோனா அச்சுறுத்தல் மிக்க பகுதிகளான கம்பஹா மாவட்டத்துடன் கொழும்பு, களுத்துறை, குருநாகல் மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் மற்றும் வாழைச்சேனை போன்ற தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோர் அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுதொடர்பான அறிவுறுத்தல் ஒவ்வொரு பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக செயற்படுமாறும் வருகை தருவோர் தொடர்பான தகவல்களை 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|