வடக்கில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளைமுதல் முன்னெடுப்பு – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!
Monday, September 20th, 2021வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், நாளைமுதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் –
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும்.
அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.
20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!
அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை ...
பதில் பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனம்!
|
|