வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021

யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் 1018 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில்  35 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேர், பருத்தித்துறை வைத்தியசாலையில் 7 பேர், சாவகச்சேரி வைத்தியசாலையில் 2 பேர், கோப்பாய் வைத்தியசாலையில் 2 பேர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவர், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் ஒருவர் என 19 பேரும் குறித்த வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ்.சிறைச்சாலையில் 2 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேர் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லுார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்  கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிலிவில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரில் 6 பேர் புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலை ஊழியர்களாவர். மற்றொருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றவர்கள் எனவம் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரும் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்றவர்களாவர். அவர்களில் 7 பேர் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் என பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: