வடக்கின் தேசிய பாடசாலைகளில் போலி 63 நியமனங்கள் – உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு!

Wednesday, June 13th, 2018

வடக்கில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு போலியாக வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

வடமாகாணத்து இளைஞர்களை ஏமாற்றி வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஒரு நியமனத்திற்காக 3 முதல் 6 இலட்சம் ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


அதிகாரிகளை ஒன்றிணைத்து கடமைகளை நிறைவேற்றுங்கள் - பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – இராஜாங்க அமைச்...
இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் - மத்திய வங்கி அத...
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி...