வடக்கின் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் – யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் தெரிவிப்பு!

Thursday, December 28th, 2023

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு இந்திய அரசு உதவிகளை செய்யும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மார்கழி பெருவிழாவும் சிறிய நடுத்தர வர்த்தக உற்பத்தி விற்பனையாளர்களுக்கான கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் – இந்தியாவை பொறுத்தவரை சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் 40 வீதமான பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்பை செய்கின்றார்கள். அதேபோல் ஏற்றுமதியில் 50 வீதமானவை சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் பங்களிப்பை செய்கின்றன. அது மட்டுமன்றி வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இவர்களே முன்னிலையில் உள்ளார்கள்.

அவ்வாறான நிலையில் இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்கள் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் தமது உற்பத்தியின் தரத்தை மேப்படுத்த வேண்டும். இந்தியா இதற்கான உதவிகளை செய்யும்.

பொருளாதார உற்பத்தியில் சரியான நடைமுறைகளை பின்பற்றி தர நிர்ணயங்களுக்கு ஏற்ப செய்வதன் மூலம் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி கொள்ளமுடியும் இந்த கண்காட்சியில் 140ற்கும் மேற்பட்ட விற்பனை காட்சிக் கூடங்கள் காணப்படுகின்றன.

இவை இன்னும் தரமான கவர்ச்சிகரமாக இருக்கும்போது இந்தியாவிற்கோ ஐரோப்பாவிற்கோ ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும். இத்தகைய கண்காட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது தொடர்பாடல்கள் அதிகரிக்கும் . இவை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: