வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் ; நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !
Monday, December 10th, 2018
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கைக்கு தென்கிழக்காக தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கிழக்கு, ஊவா, மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.இதனுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இரு தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் : பெப்ரவரி முதலாம் திகதி வாக்களிக்க முடியும் -கிளிநொச்சி மாவ...
பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு - நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!
|
|