பலாலி விமானநிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
Friday, July 5th, 2019யாழ்ப்பாணம் – பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மேம்படுத்தும் நிகழ்வு இன்றையதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகளை, போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதுணை தூதுவர், அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
அதிக கட்டணம் அறவிட்டால் அழையுங்கள் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை!
கொழும்பில் பதற்றம் - உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
|
|