யாழ்ப்பாணத்தில் கடும் மழை: விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்!

Saturday, November 16th, 2019

ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குபதிவுகள் தற்போது வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் கடும் மழைக்கும் மத்தியில் வாக்காளர்கள் தமது வாக்கை பதிவு செய்துவருகின்றனர்.

இதுவரை இடம்பெற்று வாக்குப் பதிவுகளின் வீதங்கள் வெளியாகி உள்ளன. பல இடங்களில் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.

காலி – 25%,

கண்டி – 30%,

அநுராதபுரம் – 30%,

கம்பஹா – 30%,

பொலன்னறுவை – 20%,

நுவரெலியா – 40%

யாழ்ப்பாணம் -25%

கிளிநொச்சி – 25%

புத்தளம் -40%

திருகோணமலை – 25%

மொனராகலை -45%

கேகாலை – 40%

மாத்தறை -30%

ஹம்பாந்தோட்டை – 25%

இரத்தினபுரி – 45%

வவுனியா – 25%

மன்னார் – 30%

மாத்தளை – 40%

களுத்துறை 33%

பதுளை – 54%

முல்லைத்தீவு – 36%

அம்பாறை – 30%

கொழும்பு – 32%

Related posts: